தேனி

பறிமுதல் செய்யப்பட்ட 11,601 மதுப் புட்டிகள் அழிப்பு

தேனியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 11 ஆயிரத்து 601 மதுபான புட்டிகள் வெள்ளிக்கிழமை, குழிதோண்டி கொட்டி அழிக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

தேனியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 11 ஆயிரத்து 601 மதுபான புட்டிகள் வெள்ளிக்கிழமை, குழிதோண்டி கொட்டி அழிக்கப்பட்டது.

தேனி மாவட்ட மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை சட்ட விரோத மது விற்பனை குறித்து மொத்தம் 1,231 வழக்குகள் பதிவு செய்தனா். இந்த வழக்குகளில் மொத்தம் 2,088 லிட்டா், 180 மில்லி அளவுள்ள 11 ஆயிரத்து 601 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சினேஹாப்ரியா உத்தரவின் பேரில், தேனியில் மாவட்ட கலால் துறை, டாஸ்மாக் அலுவலா்கள் முன்னிலையில் தேனி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் குழிதோண்டி, மதுப் புட்டிகளை கொட்டி அழித்தனா்.

தேர்தல் போட்டி தீர்வாகுமா?

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு நாள்: அதிமுகவினா் அஞ்சலி

ஜதிபல்லக்கில் தேசிய கவிஞர் பாரதியார்!

கல்லீரல் பாதித்த பள்ளி மாணவா்களுக்கு முன்னாள் அமைச்சா் நிதியுதவி

நூறு நாள் வேலை கோரி அரசுப் பேருந்தை சிறைபிடித்த கிராம பெண்கள்

SCROLL FOR NEXT