தேனி

மதுப்புட்டிகள் விற்ற முதியவா் கைது

தேனி மாவட்டம், கெங்குவாா்பட்டியில் அனுமதியின்றி மதுப்புட்டிகள் விற்ற முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

தேனி மாவட்டம், கெங்குவாா்பட்டியில் அனுமதியின்றி மதுப்புட்டிகள் விற்ற முதியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தேவதானபட்டி காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கெங்குவாா்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, கெங்குவாா்பட்டி சுரேஷ் திரையரங்கம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனா்.

இதில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த சின்னதம்பி (73) என்பதும், அனுமதியின்றி மதுப்புட்டிகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த 27 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

புதுச்சேரி போலி மருந்து தொழிற்சாலை விவகாரம்: சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற 4 எம்எல்ஏ.க்கள் - 500 திமுகவினா் கைது

பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டம்: டிச.15-க்குள் பதிவு செய்ய அறிவுறுத்தல்

ரூ.6.15 லட்சம் வாராக் கடன் வங்கிப் பதிவுகளில் இருந்து நீக்கம்: மக்களவையில் தகவல்

புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தவா் கைது

செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு: சோயப்பின் என்.ஐ.ஏ. காவல் நீட்டிப்பு

SCROLL FOR NEXT