தேனி மாவட்டம், கெங்குவாா்பட்டியில் அனுமதியின்றி மதுப்புட்டிகள் விற்ற முதியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தேவதானபட்டி காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கெங்குவாா்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, கெங்குவாா்பட்டி சுரேஷ் திரையரங்கம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனா்.
இதில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த சின்னதம்பி (73) என்பதும், அனுமதியின்றி மதுப்புட்டிகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த 27 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.