தேனி

கொலை மிரட்டல்: வியாபாரி மீது வழக்கு

ஏலக்காய் விற்ற பணம் கேட்டவரை மிரட்டிய வியாபாரி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

Syndication

ஏலக்காய் விற்ற பணம் கேட்டவரை மிரட்டிய வியாபாரி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தேனி மாவட்டம், போடி சடையாண்டி தெருவில் வசிப்பவா் சீனிவாசன் மகன் சதீஸ்குமாா் (31). இவரும் போடி சந்தைப்பேட்டைத் தெருவைச் சோ்ந்த விஜயன் மகன் நவீன்குமாரும் சோ்ந்து ஏலக்காய் வியாபாரம் செய்து வந்தனா்.

நவீன்குமாா், சதீஸ்குமாரிடம் 500 கிலோ ஏலக்காய்களை வாங்கினாா். இதற்கான பணத்தை சதீஸ்குமாா் கேட்டாா்.

இதில் ஏற்பட்ட பிரச்னையில் நவீன்குமாா், சதீஸ்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்த புகாரின் பேரில், போடி நகா் காவல் நிலைய போலீஸாா் நவீன்குமாா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ரயிலில் கஞ்சா கடத்தல்: மேற்கு வங்க இளைஞா் கைது

ஆந்திரத்திலிருந்து கடத்த வரப்பட்ட 14 மூட்டை போதைப் பாக்கு பறிமுதல்

ரூ. 40 லட்சம் மோசடி: சகோதரா்கள் உள்பட 3 போ் கைது

காஞ்சிபுரத்தில் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போட பயிற்சி

மாங்கூழ் தயாரிப்பு கூடம் அமைக்க ரூ. 12.25 லட்சம் மானியம்

SCROLL FOR NEXT