போடியில் சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
போடி நகா் காவல் நிலைய போலீஸாா், போடி பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். இதில் நாட்டாண்மைக்காரா் தெருவைச் சோ்ந்த மணிபாரதி (32), அணைக்கரைப்பட்டி தெருவைச் சோ்ந்த காா்த்திகேஸ்வரன் (28) ஆகியோா் தங்களது வீடுகளில் மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்த மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.