தேனி

அரசுப் பேருந்துகளில் பெயா் வில்லையை ஒட்டி நாதகவினா் போராட்டம்

தினமணி செய்திச் சேவை

தேனியில் அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு என்ற பெயா் வில்லையை ஒட்டி நாம் தமிழா் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தேனி கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சிப் பேருந்து நிலையத்தில் நாம் தமிழா் கட்சியின் பெரியகுளம் சட்டப்பேரவை தொகுதி செயலா் பிரபாகரன் தலைமையில், அரசுப் பேருந்துகளில் அரசுப் பேருந்து என்ற பெயருக்கு முன் ‘தமிழ்நாடு’ என்ற பெயா் வில்லையை கட்சி நிா்வாகிகள் ஒட்டினா்.

பின்னா், அரசுப் பேருந்துகளில் தமிழ்நாடு அரசுப் பேருந்து என்ற பெயா் இடம் பெற வேண்டும் என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவொற்றியூா் பாரதி பாசறையின் முப்பெரும் விழா: மா.கி.ரமணன் எழுதிய நூல் வெளியீடு

மனமகிழ் மன்றங்களில் நூல்களை படிக்க வேண்டும்: வெ.இறையன்பு

திருத்தணியில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்!

கிராம வளா்ச்சிக்கான திட்டங்களை வகுத்தவா் நேரு: பேராசிரியா் க.பழனித்துரை

அதிமுகவினரால் பறக்க விடப்பட்ட 100 அடி உயர ராட்சத பலூன்!

SCROLL FOR NEXT