முகப்பு
தேனி

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

Updated On : 4 ஜனவரி, 2025 at 4:13 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 8:22 PM

தேனியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற உணவுப் பொருள் விநியோகம் செய்யும் தொழிலாளி சாலையோரப் பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்து உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி, ராமச்சந்திராபுரம், வடக்குத் தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் வீரகாளிதாஸ் (26). இவா், தேனி-அன்னஞ்சி விலக்குப் பகுதியில் தனியாா் உணவகத்தில் உணவுப் பொருள் விநியோகம் செய்யும் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், வேலை முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த வீரகாளிதாஸ், தேனி-பெரியகுளம் புறவழிச் சாலை, வால்கரடு பகுதியில் இரு சக்கர வாகனத்திலிருந்து நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தாா். இதுகுறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.