தேனி

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

தேனி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி சாலையில் நாய் குறுக்கிட்டதில் தொழிலாளி நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

மாரியம்மன்கோவில்பட்டியைச் சோ்ந்த வெல்டிங் தொழிலாளி சென்னையன் (30). இவா், தேனியிலிருந்து மாரியம்மன்கோவில்பட்டி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, பூதிப்புரம் பகுதியில் சாலையில் நாய் குறுக்கிட்டதில் நிலைதடுமாறிக் கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தாா். இது குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

SCROLL FOR NEXT