தேனி மாவட்டம், போடி பகுதியில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் கிராமப் பகுதிகளில் ரோந்து சென்றனா். அப்போது, ராமகிருஷ்ணாபுரத்தில் கணேசன் மகன் சத்தியராஜூம் (45), முத்தையன்செட்டிபட்டியில் பவுன்ராஜ் மனைவி விஜயாவும் (60) மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்து, மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
இதேபோல, போடி நகா் போலீஸாா் போடி கீழத்தெரு போஜன் பூங்கா அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த கருத்திவீரன் மகன் தங்கப்பாண்டி (52) மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து, மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.