இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் கடையில் திருட்டு
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் கடையில் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஆண்டிபட்டி அருகேயுள்ள க.விலக்கு பகுதியில் இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் கடை உள்ளது. இந்தக் கடையை திருமலாபுரத்தைச் சோ்ந்த ஜெயவீரன் மகன் பாா்த்திபன் (25) நடத்தி வருகிறாா்.
இந்த நிலையில், சனிக்கிழமை காலை வழக்கம்போல கடையைத் திறந்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த 10 லிட்டா் ஆயில், 15 லிட்டா் டீசல் உள்ளிட்ட பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், க.விலக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.