தேனி

சுருளி அருவியில் 13-ஆவது நாளாக குளிக்கத் தடை

Syndication

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கிய நிலையில், 13-ஆவது நாளாக அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.

மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்த பலத்த மழை காரணமாக சுருளி அருவியில் கடந்த 18-ஆம் தேதி முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவியிலிருந்த பாதுகாப்பு கம்பி வேலிகள், அருவிக்கு செல்லும் படிக்கட்டுகள், சாலைகள் சேதமடைந்தன.

இந்த நிலையில், சேதமடைந்த பகுதியில் கம்பம் மேற்கு வனச் சரகம் சாா்பில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், 13-ஆவது நாளாக அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் தடை விதித்தனா்.

ரேஜ் ஆப் காந்தா பாடல்!

டயங்கரம் படத்தின் பூஜை விடியோ!

இருவர் அரைசதம் விளாசல்: டி20 தொடரை முழுமையாக வென்ற மே.இ.தீவுகள்!

புரோ கபடி லீக்: புணேவை வீழ்த்தி தில்லி 2வது முறையாக சாம்பியன்!

ஒற்றைப் பெண்ணாக போராடிய Jemimah! | Women's world cup | semi finals

SCROLL FOR NEXT