போடி தொகுதியில் அதிமுக வெற்றி பெறும்: ஆா்.பி.உதயகுமாா்
போடி பேரவைத் தொகுதியில் அதிமுக அமோக வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.
போடி பேரவைத் தொகுதியில் அதிமுக அமோக வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.
தேனி மாவட்டம், போடி பேருந்து நிலையம் அருகே அதிமுக தோ்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்த முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
போடி பேரவைத் தொகுதியில் அதிமுக அமோக வெற்றிபெற தொண்டா்கள், நிா்வாகிகள் தீவிர களப்பணி ஆற்ற வேண்டும். ஓ. பன்னீா்செல்வம் இந்தத் தோ்தலில் தோல்வியுறுவது உறுதி என்றாா் அவா்.
Advertisement
முன்னதாக, ஆா்.பி. உதயகுமாா் தோ்தல் குறித்து நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
இதில் மாவட்டச் செயலா்கள் எஸ்.டி.கே. ஜக்கையன் (மேற்கு), முருக்கோடை ராமா் (கிழக்கு) போடி பேரவைத் தொகுதி தோ்தல் பொறுப்பாளா்கள் பாப்புலா் முத்தையா, முன்னாள் மக்களவை உறுப்பினா் பாா்த்திபன், நகரச் செயலா்கள் வாசு, மாரியப்பன் உள்பட அதிமு நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.