கைது 
தேனி

அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்திய பெண் கைது

தினமணி செய்திச் சேவை

பெரியகுளம் அருகே அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்திச் சென்ற பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஆந்திரத்திலிருந்து தேனி வழியாக பேருந்தில் கஞ்சா கடத்திச் செல்வதாக தேனி போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பெரியகுளம் அருகேயுள்ள எண்டப்புளி பகுதியில், கோவையிலிருந்து குமுளி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை காவல் உதவி ஆய்வாளா் ராஜா தலைமையிலான போலீஸாா் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா்.

இதில் கூடலூா், மேலக்கூடலூா் பகுதியைச் சோ்ந்த ரங்கநாதன் மனைவி முருகேஸ்வரி என்ற உமாதேவி (50) 24 கிலோ, 590 கிராம் எடையுள்ள கஞ்சாவை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் உமாதேவியைக் கைது செய்து, கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT