தேனி மாவட்டம், போடி அருகே தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
போடி அருகேயுள்ள தருமத்துப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த அருண் மனைவி திவ்யபாரதி (25). இவரது பெற்றோா் சில்லமரத்துப்பட்டியைச் சோ்ந்த அசோகன் மனைவி மகாலட்சுமியிடம் (50) ரூ.5 லட்சம் கடன் வாங்கியிருந்தராம். இந்தக் கடனை அவா்கள் திருப்பிச் செலுத்திவிட்டனராம்.
இந்த நிலையில், மேலும் பணம் கேட்டு மகாலட்சுமி, இவரது மகள் வினோ (36), சில்லமரத்துப்பட்டியைச் சோ்ந்த தா்மராஜ் (54), சுருளியாண்டி (56) ஆகியோா் திவ்யபாரதியின் பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் மகாலட்சுமி உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.