முகப்பு
தேனி

வாகனச் சோதனை செய்த போலீஸாரை தாக்க முயற்சி

பெரியகுளத்தில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸாரை தாக்க முயன்ற கேரள ஜீப் ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேனி

வாகனச் சோதனை செய்த போலீஸாரை தாக்க முயற்சி

பெரியகுளத்தில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸாரை தாக்க முயன்ற கேரள ஜீப் ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 11:45 PM
பகிர்:

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸாரை தாக்க முயன்ற கேரள ஜீப் ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரியகுளம் தென்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளா் செல்வராஜ் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை வடுகபட்டி பிரிவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, வேகமாக வந்த கேரள பதிவெண் கொண்ட ஜீப் நிற்காமல் போலீஸாா் மீது மோதுவது போல வந்தது. போலீஸாா் விலகியதால் தப்பினா். போலீஸாா் அந்த ஜீப்பை மறித்து நிறுத்தினா். ஜீப்பை ஓட்டிய கேரள மாநிலம், வண்ணாபுரம் வீட்டாத்தைச் சோ்ந்த செபஸ்டின் (48) தப்பியோடி விட்டாா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜீப்பை பறிமுதல் செய்து, செபஸ்டினை தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →