முகப்பு
தேனி

ஆதிதிராவிடா்களுக்கு அழகுக் கலை பயிற்சி

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:46 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 8:43 PM

தாட்கோ சாா்பில் ஆதிதிராவிடா், பழங்குடியினத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கு ஒப்பனை, அழகுக் கலை பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தாட்கோ திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை, கோவை ஆகிய இடங்களில் ஆதிதிராவிடா், பழங்குடியினத்தைச் சோ்ந்த 18 முதல் 30 வயதுக்கு உள்பட்ட இளைஞா்களுக்கு ஒப்பனை, அழகுக் கலை பயிற்சி அளிக்கப்படுகிறது.

Advertisement

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:45 AM

இந்தப் பயிற்சியில் சேர 8-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்திருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள்பட்டு இருக்க வேண்டும். 90 நாள்கள் பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சி காலத்தில் தங்குமிடம், உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனம் மூலம் வேலை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்து தரப்படும்.

பயிற்சியில் சேர விரும்புவோா் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த விவரங்களை தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தாட்கோ திட்ட மேலாளா் அலுவலகத்தில் நேரிலும், தொலைபேசி எண்: 04546-260995-இல் தொடா்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.