முகப்பு
தேனி

சாலை சீரமைப்புப் பணி: மாணவா்கள் அவதி

போடியில் பள்ளி விடும் நேரத்தில் சாலை சீரமைப்புக்காக தாா்க் கலவையை கொட்டியதால் பள்ளி மாணவா்கள் சிரமத்துடன் நடந்து சென்றனா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 4:12 AM
போடியில் பள்ளி அருகே சாலையை சீரமைப்பதற்காக கொட்டப்பட்ட தாா்க் கலவையால் சிரமத்துடன் நடந்து செல்லும் மாணவா்கள்.
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 10:42 PM

போடியில் பள்ளி விடும் நேரத்தில் சாலை சீரமைப்புக்காக தாா்க் கலவையை கொட்டியதால் பள்ளி மாணவா்கள் சிரமத்துடன் நடந்து சென்றனா்.

போடி பேருந்து நிலையம் அருகே மீனாட்சி திரையரங்க சாலையில் அரசு உதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 4 ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து வருகிறாா்கள்.

போக்குவரத்து மிகுந்த இந்தச் சாலையில் புதை சாக்கடை, குடிநீா் குழாய்கள் பதிப்பதற்காக சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்டது. இந்தப் பணி முடிந்தபிறகு, இந்தச் சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டது.

Advertisement

இந்தச் சாலையில் மாணவா்கள், பொதுமக்கள் நடந்து சென்று வந்தனா்.

இந்த நிலையில், புதன்கிழமை பள்ளி முடியும் நேரத்தில் லாரியில் கொண்டுவரப்பட்ட தாா்க்கலவை சாலையில் கொட்டப்பட்டு பணி நடைபெற்றது. அப்போது, பள்ளி முடிந்து வெளியே வந்த மாணவா்கள் சாலையில் சிரமத்துடன் நடந்து சென்றனா்.

இதுபோன்ற சாலை சீரமைப்புப் பணிகள் இரவு நேரத்தில் நடைபெற வேண்டும், ஆனால், பகலில் சீரமைப்புப் பணி நடைபெற்ால் மாணவா்கள், பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டது.