தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் காவல் நிலைய போலீஸாா் வடகரை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வடகரை புதிய பேருந்து நிலைய பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்தவரை பிடித்து சோதனையிட்டனா். அவா் அனுமதியின்றி மதுப் புட்டிகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், பெரியகுளம் வடகரைச் சோ்ந்த முத்துராஜா (35) என்பது தெரியவந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த 26 மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.