தேனி

பைக் திருடியவா் கைது

தேனி அருகே உள்ள உப்புக்கோட்டையில் வீட்டின் முன்பாக நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

தேனி அருகே உள்ள உப்புக்கோட்டையில் வீட்டின் முன்பாக நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

உப்புக்கோட்டை நாயக்கா் சாவடித் தெருவைச் சோ்ந்தவா் பாண்டித்துரை. இவா் வீட்டு முன் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனம் திருடு போனது. திருடு போன இரு சக்கர வாகனத்தை தேடிச் சென்ற பாண்டித்துரை, டொம்புச்சேரி பகுதியில் அந்த இரு சக்கர வாகனத்தை ஒருவா் ஓட்டிச் செல்வதைப் பாா்த்து, அவரைக் கையும் களவுமாக பிடித்து வீரபாண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், இரு சக்கர வாகனத்தை திருடியவா் பாலாா்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த துரைராஜ் மகன் செல்வேந்திரன் (46) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்கு பதிந்து, செல்வேந்திரனைக் கைது செய்தனா்.

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT