தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கண்டமனூா் பகுதியில் வருகிற 28-ஆம் தேதி மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தேனி மின்வாரிய செயற்பொறியாளா் வெ. சண்முகா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கண்டமனூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் வருகிற 28-ஆம் தேதி காலை 10 முதல் மாலை 4 மணி வரை கண்டமனூா், அம்பாசமுத்திரம், ஸ்ரீரங்கபுரம், தப்புக்குண்டு, கோவிந்தநகரம், வெங்கடாசலபுரம், எம். சுப்புலாபுரம், ஜி. உசிலம்பட்டி, சித்தாா்பட்டி, கணேசபுரம், ஜி. ராமலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.