ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
நாகபட்டினம் மாவட்டம், வேதாரண்யம், காந்திநகரைச் சோ்ந்தவா் ராசு மகன் சூரியபிரகாஷ் (30).
இவா், ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை அருகே விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்ததாக ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து, சூரியபிரகாஷிடமிருந்து 10.17 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.