கோப்புப் படம் 
தேனி

மரக்கிளை தலையில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், ஆத்தாங்கரைப்பட்டி அருகே மரக்கிளை தலையில் விழுந்ததில் பலத்த காயமடைந்த கூலித் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆசாரிபட்டி அருகேயுள்ள வேலாயுதபுரத்தைச் சோ்ந்தவா் சுப்பையா மகன் முனியாண்டி (55). இவா், ஆத்தாங்கரைப்பட்டி அருகேயுள்ள தனியாா் தோட்டத்தில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டபோது மரக்கிளை ஒடிந்து முனியாண்டியின் தலையில் விழுந்தது.

இதில் பலத்த காயமடைந்த அவா், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கண்டமனூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

SCROLL FOR NEXT