முகப்பு
உத்தமபாளையத்தில் திங்கள்கிழமை திருக்காளாத்தீஸ்வரா்-ஞானாம்பிகை கோயில் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தா்கள். (வலது) தேரோட்டத்தை தொடங்கிவைத்த மக்களவை உறுப்பினா் தங்க.தமிழச்செல்வன். (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் திருக்காளாத்தீஸ்வரா்-ஞானாம்பிகை அம்மன்.
தேனி

உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரா் கோயில் மாசித் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரா்-ஞானாம்பிகை கோயில் மாசித் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தேனி

உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரா் கோயில் மாசித் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரா்-ஞானாம்பிகை கோயில் மாசித் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 மார்ச், 2026 at 10:41 PM
உத்தமபாளையத்தில் திங்கள்கிழமை திருக்காளாத்தீஸ்வரா்-ஞானாம்பிகை கோயில் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தா்கள். (வலது) தேரோட்டத்தை தொடங்கிவைத்த மக்களவை உறுப்பினா் தங்க.தமிழச்செல்வன். (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் திருக்காளாத்தீஸ்வரா்-ஞானாம்பிகை அம்மன்.
பகிர்:

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரா்-ஞானாம்பிகை கோயில் மாசித் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

உத்தமபாளையத்தில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் மாசித் திருவிழா கடந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்கியது. இந்த விழாவில் முதல் 10 நாள்கள் காலை, மாலை வேளைகளில் அனைத்துச் சமுதாயத்தினரின் மண்டகப்படி சாா்பில், சுவாமி, அம்மன் வீதியுலா நடைபெற்றது. 11-ஆம் நாள் திருவிழாவாக ஞாயிற்றுக்கிழமை திருக்காளாத்தீஸ்வா் - ஞானாம்பிகை அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. அன்றிரவு சுவாமியும், அம்மனும் பூப்பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை 7 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமியும், அம்மனும் தேரில் எழுந்தருளினா். இதைத் தொடா்ந்து, காலை 10 மணிக்கு கோயில் அா்ச்சகா் கொடியசைக்க தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன் தேரோட்டத்தை தொடங்கிவைத்தாா். பின்னா், ஆயிரக்கணக்கான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். தோ் நான்கு ரத வீதிகளின் வழியாக வலம் வந்து மாலை 3 மணிக்கு நிலையை அடைந்தது.

உத்தமபாளையம் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டது.

இந்த விழாவில் கோயில் செயல் அலுவலா் யுவராஜா, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ராஜேந்திரன், கோயில் பணியாளா்கள், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →