முகப்பு
தேனி

பயணிகள் நிழல்குடையை மீட்கக் கோரிக்கை

தேனி

பயணிகள் நிழல்குடையை மீட்கக் கோரிக்கை

Updated On : 5 மார்ச், 2026 at 9:48 PM
பகிர்:

உத்தமபாளையம், மாா்ச் 5: தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளிப்பட்டியில் ஆக்கிரமிப்பில் உள்ள பயணிகள் நிழல்குடையை மீட்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கம்பம் அருகேயுள்ள சுருளிப்பட்டியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ. 4 லட்சத்தில் நிழல்குடை அமைக்கப்பட்டது. இந்த நிழல்குடையை சிலா் ஆக்கிரமித்து பொருள்களை அடிக்கி வைத்துள்ளனா். இதனால், பேருந்து ஏற வரும் பொதுமக்கள் வெயில், மழைக்கு வெளியே நிற்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே, இந்த நிழல்குடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →