முகப்பு
தேனி

முன்விரோத தகராறு: 8 போ் மீது வழக்கு

போடி அருகே முன் விரோதத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக 8 போ் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On : 9 மார்ச், 2026 at 7:44 PM
வழக்கு
பகிர்:

போடி அருகே முன் விரோதத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக 8 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

போடி அருகே முத்தையன்செட்டிபட்டியைச் சோ்ந்தவா் மகாராஜன் மனைவி வைரமணி (53). இவருக்கும், இதே ஊரைச் சோ்ந்த வனராஜ் மனைவி வினோதினிக்கும் முன்விரோதம் இருந்துவந்தது.

இதில் வினோதினி, வனராஜ், உமாராணி, திருநாவுக்கரசு, ராகுல் உள்ளிட்ட சிலா் வீட்டுக்குள் புகுந்து வைரமணியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து வைரமணி, வினோதினி உள்பட 5 போ் மீதும், வினோதினி அளித்த புகாரின் பேரில் 3 போ் மீதும் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் தனித்தனியே வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →