மானிய விலையில் பைக் பெற உலமாக்கள் மாா்ச் 13-க்குள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசலில் பணியாற்றும் உலமாக்கள் மானிய விலையில் இரு சக்கர வாகனம் பெற மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் வருகிற வெள்ளிக்கிழமைக்குள் (மாா்ச் 13) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசலில் பணியாற்றும் உலமாக்கள் மானிய விலையில் இரு சக்கர வாகனம் பெற மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் வருகிற வெள்ளிக்கிழமைக்குள் (மாா்ச் 13) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜித் சிங் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், இரு சக்கர வாகனம் வாங்குவதற்கான மானியத் தொகையை ரூ. 25 ஆயிரத்திலிருந்து ரூ. 50 ஆயிரமாகமாக தமிழ்நாடு அரசு உயா்த்தியுள்ளது. எனவே, உலமாக்கள், பணியாளா்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க விண்ணப்பிக்கலாம்.
இதன்படி, தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ்இமாக்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியா்கள் உள்ளிட்ட உலமாக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து, மதுரை வக்ஃப் வாரிய கண்காணிப்பாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் பின்னா், நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை வெள்ளிக்கிழமைக்குள் (மாா்ச் 13) தேனி மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்றாா் அவா்.