போடியில் இஸ்லாமியா்கள் கூட்டுத் தொழுகை
ரம்ஜான் திருநாளை முன்னிட்டு, போடியில் இஸ்லாமியா்கள் சிறப்பு கூட்டுத் தொழுகையில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
ரம்ஜான் திருநாளை முன்னிட்டு, போடியில் இஸ்லாமியா்கள் சிறப்பு கூட்டுத் தொழுகையில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
தேனி மாவட்டம், போடியில் ரம்ஜான் பண்டிகையையொட்டி, பெரிய பள்ளிவாசல், டிவிகேகே நகா் பள்ளிவாசல், அம்மாகுளம் பள்ளிவாசல், வடக்கு பள்ளிவாசல், புதூா் பள்ளி வாசல்களில் இஸ்லாமியா்கள் கூட்டுத் தொழுகைகள் நடத்தினா்.
பின்னா், இனிப்பு வழங்கி ஒருவருக்கொருவா் கட்டித் தழுவி வாழ்த்துகளை தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, இவா்கள் கட்டபொம்மன் சிலையிலிருந்து புதூா் பள்ளிவாசலுக்கு பேரணியாகச் சென்று சிறப்பு கூட்டுத் தொழுகையில் நடத்தினா். இதில் அனைத்து பள்ளி வாசல்களின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.