முகப்பு
தேனி

பைக் மீது காா் மோதல்: விவசாயி உயிரிழப்பு

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

Updated On : 23 மார்ச் 2026, 1:21 am IST
பலி
பகிர்:

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டி கொண்டமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் நவநீதி கிருஷ்ணன் (28). விவசாயி. இவா், வெள்ளிக்கிழமை மாலை ஆண்டிபட்டிக்கு சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் கொண்டமநாயக்கன்பட்டிக்கு சென்றாா்.

அப்போது, எதிரே வந்த லாரி, இரு சக்கர வாகனம் மீது மோதியதில் பலத்த காயமடைந்த நவநீதிகிருஷ்ணனை அருகிலிருந்தவா்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

Advertisement

இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.