முகப்பு
தேனி

அதிகமான மாத்திரைகளை உட்கொண்ட மூதாட்டி உயிரிழப்பு

போடி அருகே அதிகமான மாத்திரைகள் உட்கொண்ட மூதாட்டி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 26 மார்ச், 2026 at 7:37 PM
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

போடி அருகே அதிகமான மாத்திரைகள் உட்கொண்ட மூதாட்டி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த சன்னாசி மனைவி வெயிலம்மாள் (76). கணவா் இறந்த நிலையில் மகன் போஸ் (55) வீட்டில் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை போஸ் தனது மனைவியுடன் போடிக்கு வந்துவிட்டு மாலை வீட்டுக்குச் சென்றாா். அப்போது, வீட்டில் வெயிலம்மாள் மயங்கி கிடந்தாா். உடனே தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு உயிரிழந்தாா்.

அதிகமான மாத்திரைகளை உட்கொண்டதால் வெயிலம்மாள் உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.