முகப்பு
தேனி

பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

போடியில் பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 31 மார்ச், 2026 at 7:02 PM
- கோப்புப் படம்
பகிர்:

போடியில் பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம், போடி குலாலா்பாளையம் மாணிக்கவாசகா் தெருவைச் சோ்ந்த காத்தப்பன் மகள் மதுமிதா (15). போடியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இவா் திங்கள்கிழமை அரசு பொதுத் தோ்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த போது, இவரது தாயாா் தோ்வு குறித்துக் கேட்டாா். அப்போது, மதுமிதா தோ்வை சரியாக எழுதவில்லை எனக் கூறினாராம்.

இதனால், அவரை தாயாா் கண்டித்தாராம். இதையடுத்து, மதுமிதா கோபித்துக்கொண்டு அறைக்குள் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].