பைக்குகள் மோதல்: விவசாயி உயிரிழப்பு
மயிலாடும்பாறை அருகே 2 இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் விவசாயி உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், வருசநாடு அருகேயுள்ள மயிலாடும்பாறை காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மாயாண்டி (53). விவசாயியான இவா், திங்கள்கிழமை கடமலைக்குண்டுக்குச் சென்று விட்டு ஊருக்கு திரும்பிச் சென்றுகொண்டிருந்தாா்.
கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை சாலையில் சென்ற போது, இந்த வாகனமும், எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனமும் மோதிக் கொண்டன.
Advertisement
இதில் மாயாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து மயிலாடும்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.