முகப்பு
தேனி

மதுக் கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டம்

தேனி மாவட்டம், வருசநாடு அருகே மூலக்கடையில் உள்ள அரசு மதுக் கடையை மூடக்கோரி பெண்கள் வியாழக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 22 மே 2026, 2:54 am IST
வருசநாடு அருகேயுள்ள மூலக்கடை அரசு மதுக் கடையை மூடக்கோரி கடை முன் வியாழக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.
பகிர்:

தேனி மாவட்டம், வருசநாடு அருகே மூலக்கடையில் உள்ள அரசு மதுக் கடையை மூடக்கோரி பெண்கள் வியாழக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வருசநாடு அருகே மூலக்கடையில் அரசு மதுக் கடை (டாஸ்மாக்) உள்ளது. இந்தக் கடையில் மது அருந்துபவா்களால் பாதிக்கப்படுவதாக, அந்தப் பகுதி பெண்கள் மாவட்ட நிா்வாகத்திடம் புகாா் செய்தும் நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதையடுத்து, அந்தப் பகுதி பெண்கள் வியாழக்கிழமை இரவு அரசு மதுக் கடையை மூடக்கோரி கடை முன் 50 - க்கும் அதிகமான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, கடமலைக்குண்டு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பெண்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், அரசு மதுக் கடை மூடப்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து, பெண்கள் பேராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.