முகப்பு
விருதுநகர்

மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி

 விவசாயிகள் மற்றும் விரிவாக்க அலுவலர்களுக்கு குறைந்த செலவில் மண்புழு உரம் தயாரித்தல் பற்றிய பயிற்சி கோவிலாங்குளம், வேளாண் அறிவியல் நிலையத்தில் நடத்தப்பட்டது.

Updated On : 5 பிப்ரவரி, 2013 at 5:01 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:48 PM

 விவசாயிகள் மற்றும் விரிவாக்க அலுவலர்களுக்கு குறைந்த செலவில் மண்புழு உரம் தயாரித்தல் பற்றிய பயிற்சி கோவிலாங்குளம், வேளாண் அறிவியல் நிலையத்தில் நடத்தப்பட்டது.

   உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குனர் செண்பகராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேளாண் உற்பத்தித் திறனையும், வருமானத்தையும் அதிகப்படுத்தும் முயற்சியாக பாசன மேலாண்மை மற்றும் வேளாண் தொழில்நுட்பங்கள்,

  விவசாயிகளுக்கு எளிதாக கிடைத்திடும் வகையில் வேளாண்மை சார்ந்த அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து உலக வங்கி உதவியுடன் நீர் வள, நில வள திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisement

   இத்திட்டத்தின் நோக்கமானது, வேளாண்மையை தீவிரப்படுத்துதல் மற்றும் மாற்றுபயிர் சாகுபடி செய்தல், உப வடிநிலங்களில் உள்ள பாசன அமைப்புகளைக் கொண்டு பயன்பெறும் பாசனபரப்பை அதிகரித்தல் மற்றும் பாசனத்தை உறுதி செய்தல் மற்றும் வேளாண் உற்பத்தி திறனை அதிகரித்து, உழவர்களின் வருவாயை அதிகரித்தல் ஆகியவை ஆகும்.

   விருதுநகர் மாவட்டத்தில் 15 உப வடிநீர் பகுதிகளில் நீர் வள, நில வள திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகின்றன.

   இப்பகுதியிலுள்ள 267 விவசாயிகள் மற்றும் 100 விரிவாக்க அலுவலர்களுக்கு குறைந்த செலவில் மண்புழு உரம் தயாரித்தல் பற்றிய பயிற்சி கோவிலாங்குளம், வேளாண் அறிவியல் நிலையத்தில் நடத்தப்பட்டது.

   பயிற்சியில் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பால்பாண்டி மற்றும் உதவி பேராசிரியர்கள், பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் சூர்யசந்திர செல்வன் ஆகியோர் விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.