காரியாபட்டி பள்ளியில் ஆண்டு விழா
காரியாபட்டி செயிண்ட் மேரீஸ் ஆங்கிலப் பள்ளியில் 26ஆவது ஆண்டு விழா நடந்தது. கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி பேராசிரியர் ஆண்டனிபால் ஞானசேகரன் தலைமை
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:00 PM
காரியாபட்டி செயிண்ட் மேரீஸ் ஆங்கிலப் பள்ளியில் 26ஆவது ஆண்டு விழா நடந்தது.
கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி பேராசிரியர் ஆண்டனிபால் ஞானசேகரன் தலைமை வகித்து பேசுகையில், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்களும், ஆசிரியர்கள் வழிகாட்டிகள் என மாணவர்களும் எண்ணிச் செயல்பட்டால் கல்வியில் சாதிக்கலாம் என்றார். இயக்குனர் பிலவேந்திரன் வரவேற்றார்.
பள்ளி முதல்வர் இமாகுலேட் ஆண்டறிக்கை வாசித்தார். நிர்வாகி கீதா நினைவுப் பரிசு வழங்கினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. துணை முதல்வர் கயல்விழி நன்றி கூறினார்.
Advertisement