சட்ட விழிப்புணர்வு முகாம்
மல்லாங்கிணறில் பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:40 PM
மல்லாங்கிணறில் பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
அருப்புக்கோட்டை வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியுமான தட்சிணாமூர்த்தி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் செல்லையா, செயலர் செல்வராஜ், வழக்குரைஞர்கள் பாலசுப்பிரமணியன், முத்துராஜன், செல்வகுமார், சீனிவாசகன், குருலெட்சுமி, ராஜேஸ்வரி, பாலசந்திரன் ஆகியோர் பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினர். காவல் துணைக் கண்காணிப்பாளர் நம்பிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.