விருதுநகர்

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள வல்லப்பன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள வல்லப்பன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

   நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியர் நாகராஜன் தலைமை தாங்கினார். கிராம கல்விக் குழுத் தலைவர் தினகரன் முன்னிலை வகித்தார். கண்காட்சியில் மாணவ, மாணவியரின் அறிவியல் சாதனங்கள், செயல்விளக்கப் படைப்புகள் இடம் பெற்றன. வல்லப்பன்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி, வெற்றிலை முருகன்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி மாணவர்கள், கிராம பொதுமக்கள் அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டனர்.

 அறிவியல் செயல் விளக்க படைப்புகள் பற்றிய கருத்துகளை அறிவியல் ஆசிரியர் வேலுமணி விளக்கினார். கண்காட்சியை பார்வையிட்ட அனைவருக்கும் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் ஆறுமுகச்சாமி இனிப்பு வழங்கினார். கண்காட்சி முடிவில் அறிவியல் செயல்விளக்க படைப்புகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு தலைமையாசிரியர் நாகராஜன் பரிசுகளை வழங்கினார்.

  அறிவியல் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் வேளாங்கண்ணி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT