கால்நடைகளை தாக்கி அழித்து வரும் கோமாரி நோயை, ஆரம்பத்திலேயே தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக் குழு கூட்டம், மாவட்டத் தலைவர் குருசாமி தலைமையில், மல்லாங்கிணறில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் விஜயமுருகன் வரவேற்றார்.
மாநில துணைச் செயலர் சுருளிநாதன் பேசினார். காரியாபட்டி ஒன்றிய செயலர் அம்மாசி நன்றி கூறினார். கால்நடைகளை கோமாரி நோய் தாக்கி வருகிறது. ஆரம்பத்திலே இந்நோயை கட்டுப்படுத்த, போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி போட, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நோய்த் தாக்கி இறந்த கறவை மாடுகளுக்கு ரூ.25 ஆயிரம், சினை மாடுகளுக்கு ரூ.20 ஆயிரம், சாதாரண மாடுகளுக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.