கலசலிங்கம் பல்கலை. பேராசிரியருக்கு இளம் விஞ்ஞானி விருது
பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரும், இயந்திரவியல் துறை பேராசிரியருமான டாக்டர் எஸ்.சரவணசங்கர் ஆலோசனையின் பேரில் இவர் இணை கோடுகளில் அமைக்கப்பட்ட பலதரப்பட்ட மிஷின்களிடையே சரியான
விருதுநகர்கலசலிங்கம் பல்கலை. பேராசிரியருக்கு இளம் விஞ்ஞானி விருது
பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரும், இயந்திரவியல் துறை பேராசிரியருமான டாக்டர் எஸ்.சரவணசங்கர் ஆலோசனையின் பேரில் இவர் இணை கோடுகளில் அமைக்கப்பட்ட பலதரப்பட்ட மிஷின்களிடையே சரியான
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக இயந்திரவியல் துறை பேராசிரியர் எஸ்.பத்ரிநாத் (படம்) க்கு தமிழ்நாடு அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் இளம் விஞ்ஞானி விருது வழங்கி கௌரவித்துள்ளது.
பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரும், இயந்திரவியல் துறை பேராசிரியருமான டாக்டர் எஸ்.சரவணசங்கர் ஆலோசனையின் பேரில் இவர் இணை கோடுகளில் அமைக்கப்பட்ட பலதரப்பட்ட மிஷின்களிடையே சரியான வரிசையில் மெட்டீரியல்களை செலுத்தி அதிக உற்பத்தி பெறுவது தொடர்பான ஆராய்ச்சியை செய்து வருகிறார். இவர் தனது ஆராய்ச்சிக் கட்டுரையை தமிழ்நாடு அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்திற்கு அனுப்பி, இளம் விஞ்ஞானி விருதுக்கு விண்ணப்பித்திருந்தார்.இதனை ஏற்றுக் கொண்ட ஆராய்ச்சிக் கழகம், இவருக்கு இளம் விஞ்ஞானி விருது வழங்கி கௌரவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அறிவியல் ஆராய்ச்சிக் கழக உறுப்பினர் மற்றும் செயலாளர் ராமசாமி அனுப்பியுள்ள உத்தரவில், பேராசிரியர் எஸ்.பத்ரிநாத் இந்த ஆராய்ச்சியை கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ள அவருக்கு நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் 3 மாதத்திற்குள் ஆராய்ச்சியை முடித்து அதன் முடிவு அறிக்கையை அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்திற்கு சமர்ப்பிக்கவும் கேட்டுக் கொண்டுள்ளார்.இளம் விஞ்ஞானி விருது பெற்ற பேராசிரியர் எஸ்.பத்ரிநாத்தை பல்கலைக்கழக நிறுவனத் தலைவர் தி.கலசலிங்கம், வேந்தர் க.ஸ்ரீதரன், துணை வேந்தர் டாக்டர் எஸ்.சரவணசங்கர், பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.