முகப்பு
விருதுநகர்

போக்குவரத்துக்கழக பணிமனை அமைப்பதில் இழுபறி

காரியாபட்டியில் போக்குவரத்துக்கழக பணிமனைக்கு இடம் தேர்வு செய்வதில் இழுபறி நீடிக்கிறது

Updated On : 29 நவம்பர், 2014 at 12:42 AM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 1:02 PM

காரியாபட்டியில் போக்குவரத்துக்கழக பணிமனைக்கு இடம் தேர்வு செய்வதில் இழுபறி நீடிக்கிறது.

காரியாபட்டியைச் சுற்றி 120-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு அரசு போக்குவரத்துக்கழக பணிமனை தொடங்க கடந்த 2009-இல் அரசு உத்தரவிட்டு, தனியார் இடத்தில் அமைக்கப்பட்டது. இந்த இடத்தில் அடிப்படை வசதிகள் கிடையாது. சாலை குண்டும், குழியுமாக மழைக்காலங்களில் சேறும் சகதியாக மாறிவிடுகிறது. வெயில் காலங்களில் புழுதி பறக்கிறது. டீசல் பங்க் கிடையாது. பணியாளர்களுக்கு ஒய்வறை கிடையாது.

இந்நிலையில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் சட்டப்பேரவையில் பணிமனைக்கு சொந்த கட்டிடம் கட்டப்படும் என முதல்வர் அறிவித்தார். இதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால், இதுவரை இடம் தேர்வு செய்யப்படவில்லை. பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள பிச்சம்பட்டியில் இடம் தேர்வு செய்தனர். ஆனால் அங்கு இடவசதி இல்லை என கை விட்டனர். இதுபோல 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் முழு ஆர்வத்துடன் செயல்பட்டு பணிமனைக்கு இடம் தேர்வு செய்ய வேண்டும் என காரியாபட்டி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.