முகப்பு
விருதுநகர்

உதவித்தொகை வழங்கக் கோரி வட்டாட்சியரை முற்றுகையிட்ட முதியோர்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் குரண்டி, மல்லாங்கிணறு, கல்குறிச்சி பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு கடந்த சில மாதங்களாக முதியோர் உதவித்தொகை

Updated On : 30 நவம்பர், 2014 at 12:26 AM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 1:03 PM

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் குரண்டி, மல்லாங்கிணறு, கல்குறிச்சி பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு கடந்த சில மாதங்களாக முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டது. இதனால் வயதானவர்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இந்நிலையில் குரண்டி கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட முதியவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் பொன்ராமரை முற்றுகையிட்டனர். உதவிதொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் உறுதியளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.