முகப்பு
விருதுநகர்

சாத்தூர் அருகே ஓட்டுநர் நடத்துநரைத் தாக்கிய இளைஞர் கைது

விருதுநகர் அருகே பயணச்சீட்டு எடுக்காததைக் கண்டித்த அரசுப் பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநரைத் தாக்கிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 23 அக்டோபர், 2014 at 7:15 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 12:35 PM

விருதுநகர் அருகே பயணச்சீட்டு எடுக்காததைக் கண்டித்த அரசுப் பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநரைத் தாக்கிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

சாத்தூர் அருகே படந்தால் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(19). இவர் சிவகாசியிலிருந்து-சாத்தூர் செல்லும் அரசு பேருந்தில் வியாழக்கிழமை ஏறி பயணம் செய்தாராம். அப்போது, சாத்தூர் அருகே வரும் போது திடீரென பயணச்சீட்டு பரிசோதகர்கள் ஏறி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மணிகண்டன் பயணச்சீட்டு எடுக்காதது தெரியவந்தது. உடனே அவரிடம் இருந்து ரூ.100 அபராத கட்டணம் வசூலித்துள்ளனர்.

இந்த முன்விரோதத்தை மனதில் வைத்து சாத்தூர் பேருந்து நிலையத்திற்கு சென்று அரசு பேருந்து திரும்பி படந்தால் அருகே வந்தது. அப்போது மணிகண்டன் மற்றும் அவரது நண்பரும் பேருந்தை நிறுத்தி உள்ளே சென்று ஓட்டுநர் பழனிபாண்டி(32), நடத்துநர் கருப்பசாமி(52) ஆகியோரை கண்டபடி பேசி கைகளால் தாக்கியுள்ளனர்.

Advertisement

இது தொடர்பாக நடத்துநர் கருப்பசாமி சாத்தூர் நகர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் படந்தால் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர். மேலும், அவரது நண்பரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.