விருதுநகர்

காரியாபட்டியில் தென்மண்டல கேரம் போட்டி

காரியாபட்டியில் மனு கேரம் ஸ்போர்ட்ஸ் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து தென்மண்டல அளவிலான கேரம் போட்டியை நடத்தின.

கல்யாணி வெங்கடராமன்

காரியாபட்டியில் மனு கேரம் ஸ்போர்ட்ஸ் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து தென்மண்டல அளவிலான கேரம் போட்டியை நடத்தின.

மதுரை மாவட்ட கேரம் சங்கத் தலைவர் வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தார். தென் மண்டல செயலர் கார்த்திகேயன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக புலவர் சங்கரலிங்கம் கலந்து கொண்டார். 2 நாள்கள் நடந்த போட்டியில் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். சுப்பையா நாடார், எஸ்.பி.எம். டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி, சுரபி டிரஸ்ட் நிறுவனர் விக்டர் தங்க தமிழ்வாணன் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர். துணைச் செயலர் காந்திராஜ் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT