காரியாபட்டி அருகே பெண் தற்கொலை
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே குடும்பத் தகராறில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
Updated On : 9 ஜனவரி, 2024 at 9:39 AM
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே குடும்பத் தகராறில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
சின்ன காரியாபட்டி ஜெகஜூவன்ராம் நகரை சேர்ந்தவர் வல்லத்துராஜா.
கூலி தொழிலாளி. இவரது மனைவி சித்ரா(39). இவர்களுக்கு அழகர்சாமி என்ற மகனும், சத்யா என்ற மகளும் உள்ளனர்.
Advertisement
கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த சித்ரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து, காரியாபட்டி எஸ்.ஐ. அசோக்குமார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.
வல்லத்துராஜாவிற்கு ஏற்கனவே இரண்டு திருமணமாகி, ஒரு மனைவி உடல்நலம் பாதிக்கப்பட்டும், மற்றொரு மனைவி நெஞ்சுவலியாலும் இறந்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.