விருதுநகர்

இணையதளம் வாயிலாக பத்திரப் பதிவு: பொது மக்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி

DIN

இணையதளம் வாயிலாக பத்திரம் பதிய வேண்டும் என, விருதுநகரில் சனிக்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு பயிற்சியில் கூடுதல் பத்திரப் பதிவு தலைவர் கே.வி. ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு இடத்தில் பரிட்சார்த்தமாக இணையதளம் மூலம் பத்திரப் பதிவு நடைபெற்று வருகிறது.
இம்முறையை அனைத்து பத்திரப் பதிவு அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் காரணமாக, பொதுமக்கள் மற்றும் ஆவண எழுத்தர்களுக்கு இணையதளம் வாயிலாக பத்திரப் பதிவு செய்வது எப்படி என்பது குறித்து கணினி மூலம் பயிற்றுனர்கள் விளக்கினர்.
இதை நடைமுறைக்கு கொண்டுவர அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் அவர். இந்த விழிப்புணர்வுப் பயிற்சி முகாமில் ஆவண எழுத்தர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT