விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில், ராஜபாளையத்தில் வியாழக்கிழமை மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ராஜபாளையம் ஐவஹர் மைதானத்தில், மாவட்டத் தலைவர் ச. தளவாய் பாண்டியன் தலைமையிலும், மகளிரணி தலைவி த. முத்து முன்னிலையிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்தியிலுள்ளபாஜக அரசைக் கண்டித்தும், மாநில அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில், சிறப்புப் பேச்சாளர் மோகன், மு. கணேசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். முன்னதாக, மாநில விவசாய துணைத் தலைவர் அ. சுந்தரம் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தார்.
கூட்ட ஏற்பாடுகளை, நகர பொறுப்புத் தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் ரவிராஜா ஆகியோர் செய்திருந்தினர். அய்யனார் நன்றி கூறினார்.