விருதுநகர்

ராஜபாளையத்தில் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

DIN

விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில், ராஜபாளையத்தில் வியாழக்கிழமை மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ராஜபாளையம் ஐவஹர் மைதானத்தில், மாவட்டத் தலைவர் ச. தளவாய் பாண்டியன்  தலைமையிலும்,  மகளிரணி தலைவி த. முத்து முன்னிலையிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்தியிலுள்ளபாஜக அரசைக் கண்டித்தும், மாநில அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.   
இதில், சிறப்புப் பேச்சாளர் மோகன், மு. கணேசன் ஆகியோர் கலந்துகொண்டு  சிறப்புரையாற்றினர். முன்னதாக, மாநில விவசாய துணைத் தலைவர் அ. சுந்தரம் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தார்.
கூட்ட ஏற்பாடுகளை, நகர பொறுப்புத் தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் ரவிராஜா ஆகியோர் செய்திருந்தினர். அய்யனார் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT