விருதுநகர்

வெடி பொருள் வெடித்து  2 சிறுவர்கள் காயம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஞாயிற்றுக்கிழமை தகர டப்பாவில் இருந்த வெடி பொருள் வெடித்ததில் இரு சிறுவர்கள் காயம் அடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரம் செண்பகத்தோப்பில் பகவதிநகர் மலைவாழ் மக்கள் குடியிருப்பு உள்ளது.
இங்கு வசிக்கும் காளியப்பன் மகன் மகாலிங்கம் (8),  பாண்டி மகன் மணிகண்டன் (8) ஆகியோர்  ஞாயிற்றுக்கிழமை விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.  அப்போது அங்கு ஒரு தகர டப்பா கிடந்துள்ளது.  அதை சிறுவர்கள் கல்லால் தட்டியுள்ளார்கள்.  அப்போது டப்பா பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது.
இதில் மகாலிங்கத்தின் கையிலும்,  மணிகண்டனின் காலிலும் பலத்த காயம் ஏற்பட்டது.  இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.  மகாலிங்கம் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மம்சாபுரம் காவல் ஆய்வாளர் ஜெ.மகேஷ்குமார்  சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT