முகப்பு
விருதுநகர்

பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கு

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் விழிப்புணர்வுக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் விழிப்புணர்வுக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
     பள்ளித் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) எஸ். ராஜசேகரன் தலைமை வகித்தார். வத்திராயிருப்பு காவல் ஆய்வாளர் நாகராஜ்,  ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் பால்ச்சாமி, சார்பு-ஆய்வாளர் செல்வக்குமார், செவிலியர் அனுசியா ஆகியோர் கருத்துரையாற்றினர்.     நிகழ்ச்சியில், 1,500 மாணவ- மாணவியர் பங்கேற்றனர். முன்னதாக, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் சாமுவேல் வரவேற்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →