விருதுநகர்

ஸ்ரீவிலி.யில் அதிமுக 46 ஆம் ஆண்டு கொண்டாட்டம்

DIN

அதிமுக தோற்றுவிக்கப்பட்டு 46 ஆண்டுகளாவதையொட்டி,  ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுகவினர் செவ்வாய்க்கிழமை கொண்டாடினர்.
தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மு. சந்திரபிரபா மற்றும் முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் த. முத்தையா ஆகியோர்  தலைமையில் ஏராளமான அதிமுக தொண்டர்கள், பேருந்து நிலையத்தில் உள்ள கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கினர்.    
மேலும், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர், ஒன்றியம், வத்திராயிருப்பு ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா  கட்சிக் கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில், கட்சியின் ஒன்றியச் செயலர் எஸ்.கே. மயில்சாமி, கூட்டுறவு நகர வங்கித் தலைவர் எஸ்.எம். பாலசுப்பிரமணி, நகர் பொருளாளர் கருமாரி எஸ். முருகன், வத்திராயிருப்பு ஒன்றியச் செயலர் சுப்புராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT