விருதுநகர்

ராஜபாளையம் நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

ஒட்டன்சத்திரம் நகராட்சி ஊழியர் பால்பாண்டியன் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி, ராஜபாளையத்தில் நகராட்சி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ராஜபாளையம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நகராட்சி அலுவலர் சங்கத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
     இதில், கடும் பணிச்சுமை கொடுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையரை விசாரிக்க வேண்டும். பால்பாண்டியன் தற்கொலைக்கு காரணமானவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலர்கள் கோஷமிட்டனர்.
   மேலும் உயிரிழந்த பால்பாண்டியன் குடும்பத்திற்கு அரசு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளும் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப் பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

SCROLL FOR NEXT