விருதுநர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கார் மீது லாரி மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். காரில் பயணித்த இருவர் படுகாயம் அடைந்தனர்.
கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் ஜோ.அமல்ஜோஸ் (25), ஆலயம் என்ற இடத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு (26), தலைமலையைச் சேர்ந்தவர் சு.சிந்து (24). இவர்கள் மூவரும் கொல்லத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.
பாலக்காட்டில் உள்ள தங்களது அலுவலகக் கிளையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள மூவரும் திங்கள்கிழமை இரவு காரில் புறப்பட்டுள்ளனர். காரை அமல்ஜோஸ் ஓட்டி வந்துள்ளார்.
திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள பூவாணி விலக்கு அருகே கார் வந்த போது எதிரே வந்த லாரி கார் மீது மோதியது. இதில் மூவரும் படுகாயம் அடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் அமல்ஜோஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் லாரியை ஓட்டி வந்த திருச்சி, தொட்டியம், ஆலம்பாளையம்புதூரைச் சேர்ந்த சீ.வேலுச்சாமி என்பவரைக் கைது செய்தனர்.