விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கார் மீது லாரி மோதல்: ஒருவர் சாவு

DIN

விருதுநர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கார் மீது லாரி மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். காரில் பயணித்த இருவர் படுகாயம் அடைந்தனர்.
  கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் ஜோ.அமல்ஜோஸ் (25), ஆலயம் என்ற இடத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு (26), தலைமலையைச் சேர்ந்தவர் சு.சிந்து (24). இவர்கள் மூவரும் கொல்லத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.
 பாலக்காட்டில் உள்ள தங்களது அலுவலகக் கிளையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள மூவரும் திங்கள்கிழமை இரவு காரில் புறப்பட்டுள்ளனர். காரை அமல்ஜோஸ் ஓட்டி வந்துள்ளார். 
  திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள பூவாணி விலக்கு அருகே கார் வந்த போது எதிரே வந்த லாரி கார் மீது மோதியது. இதில் மூவரும் படுகாயம் அடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 
   இதில் அமல்ஜோஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
  ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் லாரியை ஓட்டி வந்த திருச்சி, தொட்டியம், ஆலம்பாளையம்புதூரைச் சேர்ந்த சீ.வேலுச்சாமி என்பவரைக் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT