மது குடித்தவர் மயங்கி விழுந்து சாவு
ராஜபாளையம் அருகே அதிகளவில் மது குடித்தவர் புதன்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
ராஜபாளையம் அருகே அதிகளவில் மது குடித்தவர் புதன்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
தேவதானம் பச்சையாறு எஸ்டேட்டில் வேலை செய்து வந்தவர் கருப்பையா மகன் சங்கிலிபாண்டி (38).
இவர், புதன்கிழமை தேவதானம் வந்து அதிகளவில் மது குடித்துவிட்டு எஸ்டேட்டுக்குச் சென்றுள்ளார். ஆனால், செல்லும் வழியிலுள்ள தோப்புப் பகுதியில் சங்கிலிபாண்டி மயங்கி விழுந்து இறந்து விட்டாராம்.
இது குறித்து இவரது மனைவி உமாமகேஸ்வரி, சேத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.